இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
293
“மாரிஈங்கை மாத்தளிர் அன்ன”-அகநா. 75:1:7
“ஈங்கை” என்பதற்கு, ‘இண்டு, இண்டை’ என்று உரை கூறுவர்.
“ஈங்கை இலவம் தூங்கிணர்க் கொன்றை”-குறிஞ். 86
என்ற அடியில் உள்ள ஈங்கை என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘இண்டம்பூ’ என்று உரை கண்டுள்ளார்.
ஈங்கை தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | காலிசிபுளேரே (Calyciflorae) |
தாவரக் குடும்பம் | : | மைமோசாய்டியே |
தாவரப் பேரினப் பெயர் | : | மைமோசா (Mimosa) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | ரூபிகாலிஸ் (rubicaulis) |
சங்க இலக்கியப் பெயர் | : | ஈங்கை |
உலக வழக்குப் பெயர் | : | இண்டு, இண்டை, இண்டங்கொடி |
தாவர இயல்பு | : | புதர்க் கொடி. நீண்டு வளரும், இக்கொடியில் வளைந்த முட்கள் செறிந்திருக்கும். |
இலை | : | கூட்டிலை, 10-15 இறகன்ன பிரிவுடையது. சிற்றிலைகள் சிறியவை 0. 5.-0.7 அங்குலம் நீளமானவை. இலைக் காம்பில் முட்கள் இருக்கும். |
மஞ்சரி | : | இலைக்கோணத்தில் தனிக் கொத்தாக உண்டாகும். எனினும் நுனியில் நுனி வளர் பூந்துணரா கிடும். |
புல்லி வட்டம் | : | புனல் வடிவானது. 4 புறவிதழ்கள் இணைந்தவை. |
அல்லி வட்டம் | : | 4 அகவிதழ்கள் மேலே தனித்தனி பிரிந்து காணப்படும் .அடியில் இணைந்திருக்கும். |