இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தாவரங்கள்
355
திருத்தக்க தேவர், நீரில் தோய்த்த வெண்துகில் போன்றது இதன்பூ என்பர்.
“மாசில் வெண்துகிலை நீர் தோய்த்து மேற்போர்த்த வண்ணமே போல்
காசின் மாட்டொழுகப் பூத்த அழிஞ்சில் கண்ணார் கவின் கொண்டன ”[1]
இம்மரம் தாவரவியற் சிறப்புடையது.
“சே”–அழிஞ்சில் தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | காலிசிபுளோரே (Calyciflorace) |
தாவரக் குடும்பம் | : | அலாஞ்சியேசி |
தாவரப் பேரினப் பெயர் | : | அலாஞ்சியம் (Alangium) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | சால்விபோலியம் (salvifolium) |
சங்க இலக்கியப் பெயர் | : | அழிஞ்சில்–தொல்காப்பியத்துள் காணப்படுகிறது. |
உலக வழக்குப் பெயர் | : | அழிஞ்சி மரம், அலஞ்சி |
தாவர இயல்பு | : | மரம், இலையுதிர் சிறுமரமென்ப. |
தாவர வளரியல்பு | : | மீசோபைட் |
இலை | : | அரை அங்குல நீளமான தனி இலை. 3-5 நரம்புகள் உள்ளன. |
மஞ்சரி | : | நுனி வளராப் பூந்துணர். கொத்தாகத் தோன்றும். |
மலர் | : | மஞ்சள் கலந்த வெண்ணிறமானது. அழகானது. மணமுள்ளது. மலர்க் காம்புடன் சூலகம் இணைந்திருக்கும். |
- ↑ சீ. சிந். 1649 :2-3