இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
374
சங்க இலக்கியத்
அவ்வூர்த் தலைவன் நெடுங்கை வேண்மான். அவனால் இவ்வூர் காக்கப்பட்டு வந்தது. இச்செய்தியை நக்கீரர் கூறுகின்றார்.
“. . . .. . . .. . . . உறந்தைக் குணாஅது
நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர்”
-புறநா. 395 : 19-20
நறுமணமுள்ள இதன் மலர்க் கொத்தை மகளிர் அணிந்து கொள்வர்.
பிடஉ தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | இன்பெரே (Infarae) அகவிதழ் இணைந்தது. |
தாவரக் குடும்பம் | : | ரூபியேசி (Rubiaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | ரண்டியா (Randia) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | மலபாரிகா (malabarica, Lam.) |
தாவர வளரியல்பு | : | வறண்ட நிலத் தாவரம். |
தாவர இயல்பு | : | புதர்ச்செடி. அடர்ந்தும், பரந்தும், கிளைத்தும், உயர்ந்தும் வளரும். வலிய தண்டுடையது. சிறு மரம் போலத் தோன்றும். அடி முதல் நுனி வரை இலைக் கோணத்தில் முட்கள் உடையது. |
இலை | : | 1-3 அங்குல நீண்ட இலைகள் எதிரடுக்கில் உள்ளன. பளபளப்பானது. தோல் போன்றது. கணுவிலுள்ள இரு இலைகளில் ஒன்று பெரிதும் வளர்வதில்லை. இலைக்கோணத்தில் இரு சிறு முட்கள் வளரும். |
மஞ்சரி | : | இலைக்கோணத்தில் ‘காரிம்ப்’ வகையான ‘அம்பல்’ எனப்படும் நுனி |