இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குவளை-செங்கழுநீர்
நிம்பேயா நௌசாலியா (Nymphaea nouchalia, Burm.f)
‘தண் கயக்குவளை’ என்ற கபிலரின் கூற்றுக்கு (குறிஞ். 63) ‘குளிர்ந்த குளத்தில் பூத்த செங்கழுநீர்ப்பூ’ என்று உரை கூறினார் நச்சினார்க்கினியர்.
சங்க இலக்கியப் பெயர் | : | குவளை |
சங்க இலக்கியத்தில் வேறு பெயர்கள் | : | நீலம், செங்குவளை, காவி |
பிற்கால இலக்கியப் பெயர் | : | செங்கழுநீர், கழுநீர், நீலம், காவி, செங்குவளை, நீலோற்பலம். |
உலக வழக்குப் பெயர் | : | நீலத்தாமரை, நீலோற்பலம்.நீல அல்லி, செங்கழுநீர். |
தாவரப் பெயர் | : | நிம்பேயா ஸ்டெல்லேட்டா என்று குறிப்பிடப்பட்டது. இப்போது இதனை நிம்பேயா நௌசாலியா என்று மாற்றியுள்ளதாகக் கூறுவர். ஆகலின் இது Nymphaea nouchalia, Burm.f. எனப்படும். |
குவளை செங்கழுநீர் இலக்கியம்
குவளை என்பது பொதுவாகச் செங்குவளையாகும். இதனை செங்கழுநீர் எனவும் நீலோற்பலம் எனவும் கூறுவர் .
- “தண்கயக் குவளை”-குறிஞ். 63
- “பெரும்பல் குவளைச் சுரும்புபடு பன்மலர்”
- “பெரும்பல் குவளைச் சுரும்புபடு பன்மலர்”
-மதுரைக் . 566