இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
480
சங்க இலக்கியத்
சேடல் (பவள மல்லிகை) தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | பைகார்ப்பெல்லேட்டே |
தாவரக் குடும்பம் | : | ஓலியேசி |
தாவரப் பேரினப் பெயர் | : | நிக்டாந்தெஸ் (Nyctanthes) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | ஆர்போர்-டிரிஸ்டிஸ் (arbor-tristis) |
தாவர இயல்பு | : | சிறுமரம். 2-2.5 மீட்டர் உயரமானது. 1 மீட்டர் உயரத்துக்கு மேல் நன்கு வளர்ந்து, கிளைத்து, அடர்ந்திருக்கும். |
தண்டு | : | அடிமரம் வன்மையானது. 8-12 செ. மீ. வட்டமாக, அகன்று காணப்படும். கட்டை வெளிறிய சிவப்பு அல்லது மஞ்சள் பழுப்பு நிறமானது. |
கிளை நுனி | : | 4 பட்டையாக இருக்கும். |
இலை | : | தனியிலை. 10-11 X 5-6 செ. மீ. நீள, அகலம். எதிர் அடுக்கில் அமைந்தவை. சற்று நீண்ட முட்டை வடிவம். |
விளிம்பு | : | கூரிய பற்கள் உடையது. |
நுனி | : | நீண்டு கூர்மையானது. |
நரம்பு | : | நடு நரம்பு தடித்தது. இலை அடியில் உள்ள நரம்புகள் இருமருங்கும் நீண்டு, இலை முழுதும் பரவி இருக்கும். இலைப் பரப்பெல்லாம் கூரிய சிறு முட்கள் உள்ளதால், சொரசொரப்பாக இருக்கும். |
மஞ்சரி | : | இலைக்கோணத்தில முப்பிரிவாக உண்டாகும் சைம்கள் 4-6 மலர்கள் காணப்படும். |
மஞ்சரிக் காம்பு | : | சிறியது. மஞ்சளும் ஆரஞ்சு வண்ணமுமுள்ள அகவிதழ்க் குழலும், |