இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நந்தி–நந்தியாவட்டம்
எர்வட்டாமியா கோரோனேரியா
(Ervatamia coronaria,Stapf.)
குறிஞ்சிப்பாட்டில் (91) கபிலர் கூறும் ‘நந்தி’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘நந்தியாவட்டப் பூ’ என்று உரை கண்டார். நந்தியாவட்டம் ஒரு புதர்ச்செடி.பல்லாண்டு வாழும் இயல்பிற்று.
சங்க இலக்கியப் பெயர் | : | நந்தி |
பிற்கால இலக்கியப் பெயர் | : | நந்தியாவட்டம், நந்தியாவர்த்தம் |
உலக வழக்குப் பெயர் | : | நந்தியாவட்டை, வலம்புரி |
தாவரப் பெயர் | : | எர்வட்டாமியா கோரோனேரியா (Ervatamia coronaria,Stapf.) |
நந்தி இலக்கியம்
குறிஞ்சிப் பாட்டில் கபிலர் இதனை ‘நந்தி’ என்று குறிப்பிடுகின்றார்.
“நந்தி நறவம் நறும்புன் னாகம்”-குறிஞ். 91
‘நந்தி’ என்பதற்கு உரை கூறிய நச்சினார்க்கினியர் ‘நந்தியா வட்டப் பூ’ என்றார். பிங்கலம்,
“வலம்புரி நந்தியா வர்த்த மாகும்”[1]
என்று கூறி வலம்புரி என்னும் இன்னொரு பெயரையும் இதற்கேற்றும். இதன் மலரின் அகஇதழ்கள் ஐந்தும் அடியில் இணைந்திருப்பினும் மேலே மடல் விரிந்து ஒன்றிற்கொன்று நந்தாமல் வலப்புற வட்டமாக அமைந்துள்ளமையின் ‘நந்தியாவட்டம்’
- ↑ பிங். நி. 2951