இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
533
வள்ளை தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | பைகார்ப்பெல்லேட்டே (Bicarpellatae) |
தாவரக் குடும்பம் | : | கன்வால்வுலேசி (convolvulaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | ஐபோமியா (Ipomoea) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | ரெப்டன்ஸ் (reptans) இது முன்னர் அக்குவாட்டிககா (aquatica) எனப்பட்டது. |
சங்க இலக்கியப் பெயர் | : | வள்ளை |
தாவர இயல்பு | : | நீர்க் கொடி. சுற்றிச் சுழன்று, வளைந்து, நெளிந்து, நீண்டு, நீரில் மிதந்து வளரும். ஒராண்டு வாழும் இயல்பிற்று. கொடித்தண்டில் சிறு துளையிருக்கும். |
இலை | : | தனியிலை. நீண்ட இலைக் காம்பு மூன்று பிளவானது. அடியில் உள்ள இரு பிளவுகள் 3 அங்குல அகலமானவை. நுனியில் உள்ள நீண்ட பிளவு 5 அங். நீளம் வரையிருக்கும். |
மஞ்சரி | : | நுனி வளராப் பூந்துணர். |
மலர் | : | ஊதா நிறமானது. புனல் வடிவானது. உட்புறக் கழுத்து சற்றுக் கருநீலமாக இருக்கும். அழகிய மலர். |
புல்லி வட்டம் | : | 5 புறவிதழ்கள். 2-3 அங்குலமுள்ள முட்டை வடிவானவை. |
அல்லி வட்டம் | : | புனல் வடிவானது. 5 அகவிதழ்கள் அடியில் இணைந்து, குழல் போன்றும், மேலே ஊதா நிற மடல் விரிந்தும் அழகாகத் தோன்றும். |
மகரந்த வட்டம் | : | 5 மெல்லிய தாதிழைகள் அகவிதழ்களின் உள்ளே காணப்படும் தாதிழை |