முசுண்டை
ரைவியா ஆர்னேட்டா (Rivea ornata ,Choisy.)
முசுண்டை இலக்கியம்
சங்க இலக்கியங்கள், ‘புன்கொடி முசுண்டை’ எனவும், ‘கொழுங்கொடி முசுண்டை’ எனவும் பேசுமாறு போல இது ஒரு கொடியாகும்.
‘முசுண்டை’ என்பதற்கு நச்சினார்க்கினியர் பத்துப்பாட்டில் ‘முசுட்டை’ என்று உரை கூறுகின்றார்: (நெடுந. 13, சிறுபா.166) இச்சொல் உலக வழக்கில் உள்ளது.
இதன் முகை சற்றுத் திருகினாற் போல இருத்தலின், ‘சுரிமுகிழ் முசுண்டை’ எனக் கூறப்படுகிறது (மதுரை 281) இதன் பூ திரட்சியுடையது. வெண்ணிறமானது. நடுயாமத்தில் மலர்வது.
“குன்றுகுளிர்ப் பன்ன கூதிர்ப் பானாள்
புன்கொடி முசுண்டைப் பொதிப்புற வான்பூ” -நெடுந. 13
மழை நின்று தெளிந்த வானில் விண்மீன்கள் அணி கொண்டவாறு போல இக்கொடி மலரும் என்பார் இளங்கண்ணனார்.
“மழையில் வானம் மீன்அணிந் தன்ன
குழையாமல் முசுண்டை வாலிய மலா”-அகநா. 264:1-2
கார்த்திகை விண்மீன் போலப் பூத்தது என்று கூறுவர் பெருங் கௌசிகனார்.
“அகலிரு விசும்பின் ஆஅல் (ஆரல்) போல
வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை”
-
மலைப. 100-101