இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
550
சங்க இலக்கியத்
இதற்குப் பாடலம் என்ற பெயரும் உண்டு. இப்பெயரால், வட நாட்டில் ‘பாட்னா’ என்னும் ‘பாடலிபுத்திரம்’ பெயர் பெற்றது. சேக்கிழார் இதனைப்
“பாடலிபுத்திர மென்னும் பதி”[1]
என்கிறார்.
இம்மரத்தின் கிளை, முருங்கை போன்று எளிதில் ஒடியும். புல்லியது. இதனால், இதற்குப் ‘புன்காலி’ என்றறொரு பெயர் உண்டென நிகண்டுகள் கூறும்.
பாதிரி தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | பைகார்ப்பெல்லேட்டே (Bicarpellatae) பர்சொனேலீஸ் (Personales) |
தாவரக் குடும்பம் | : | பிக்னோனியேசி (Bignoniaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | ஸ்டீரியோஸ்பர்மம் (Stereospermum) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | ஸ்வாவியோலென்ஸ் (suaveolens, Dc.) |
தாவர இயல்பு | : | பெரு மரம்; மைசூர், மலபார், திருவிதாங்கூர் முதலிய மாநிலங்களில் மலைப் பகுதிகளில் உள்ள இலையுதிர் காடுகளில் வளர்கிறது. |
இலை | : | கூட்டிலை; எதிரடுக்கானது |
மஞ்சரி | : | நீண்ட காம்புள்ள கலப்பு மஞ்சரி. |
மலர் | : | செந்நீல ஊதா நிறமான, நீண்ட, பெரிய பூ; நறுமணமுள்ளது. ஐந்தடுக்கானது. இரு பாலானது. |
புல்லி வட்டம் | : | 5 முக்கோண வடிவான, மஞ்சள் நிறமான, புறவிதழ்கள் குவிந்திருக்கும். |
- ↑ பெரி. பு: திருநா. 38