இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாவரங்கள்
555
மலர் | : | .மலர்கள் இலைக் கோணத்தில் தனித்து உண்டாகும். தூய வெண்ணிற மலர் கவிழ்ந்து மலரும். அடியில் அகவிதழ்கள் குழாய் வடிவாகவும், நுனியில் இரு உதடுகளாகவும் இருக்கும். |
புல்லி வட்டம் | : | சிறிய புறவிதழ்கள் 6 சிறு பிளவுகளாக இருக்கும். |
அல்லி வட்டம் | : | 5 அகவிதழ்கள் இணைந்து, 1 முதல் 1.25 அங்குல நீளமாக இருக்கும். நுனியில் மடல் இரு உதடுகளாக விரியும். மேல் உதடு 3 இதழ்களை உடையது. சற்று நீளமானது. அடி உதடு இரு இதழ்கள் இரு பக்கங்களிலும் இருக்கும். |
மகரந்த வட்டம் | : | 4 தாதிழைகள்; 2 தாதிழைகள் உயரமானவை. மடலுக்குள்ளே அடங்கியிருக்கும். தாதுப்பை சற்று நீண்டது. அடியில் மலர்க் கிண்ணம் வட்ட வடிவானது. |
சூலக வட்டம் | : | இரு செல் உள்ளது. சூலகத்தின் நடுவே உள்ள பிரிவுச் சுவர் இதனை 4 ஆகப் பிரிக்கும். பல சூல்கள் உண்டாகும். ஒவ்வொரு செல்லிலும் ஒரு விதை வரிசை உண்டாகும். |
கனி | : | காப்சூல் என்ற உலர்கனி: இரு பகுதியாக வெடிக்கும். பல விதைகள் உதிரும். |
விதை | : | இதுதான் ‘எள்’ எனப்படும். இதில் மெல்லிய வித்திலைகள் சற்று நீண்டு இருக்கும். |
எள்ளில் உண்டாகும் நெய்தான் எண்ணெய் எனப்படுவது. இதற்கு நல்ல எண்ணெய் என்று பெயர். இந்த எண்ணெய் உணவாகவும், வேறு பல முறைகளாகவும் பயன்படும். இதற்காக எள்ளுச் செடி வயல்களில் விதைத்துப் பயிரிடப்படும். இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 26 என மொரிநாகாவும் பிறரும்