இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தாவரங்கள்
597
“. . . . . . . . . . . . வடுவாழ் மார்பின்
அம்புசேர் உடம்பினர்ச் சேர்ந்தோர் அல்லது
தும்பை சூடாது மலைந்த மாட்சி”-பதிற். ப. 42 : 4-6
மற்று, தழைத்த தும்பை சூடி வென்றாரைப் பாடும் புலவர் ஒருவரைத் ‘தும்பைப் புலவர்’ என்றார் ஐயூர் மூலங்கிழார்.
“ஆடுகொளக் குழைந்த தும்பைப் புலவர்
பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே”-புறநா. 21 : 10-11
மேலும் தும்பைப் பூவைக் கொத்தோடு ஆடவரும், மகளிரும் அணிவதும் உண்டென்பதை முறையே புறநானூற்றிலும் (96 : 1) ஐங்குறுநூற்றிலும் (127 : 2) காணலாம்.
தும்பை மலர் மருந்தாகவும் பயன்படும். இதன் மலர்களை நல்லெண்ணெயில் காய்ச்சித் தலையில் தேய்த்து, முழுக ஒரு பக்கத் தலைவலி குணமாகும் என்பர்.
தும்பை தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | பைகார்ப்பெல்லேட்டே லாமியேலீஸ் அகவிதழ்கள் இணைந்தவை. |
தாவரக் குடும்பம் | : | லேபியேட்டே (Labiatae) |
தாவரப் பேரினப் பெயர் | : | லியூகஸ் (Leucas) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | ஆஸ்பெரா (aspera) |
சங்க இலக்கியப் பெயர் | : | தும்பை |
தாவர இயல்பு | : | 3000 அடி உயரம் வரை வறண்ட வெற்றிடங்களில் 1-3 அடி உயரம் வரையில் வளரும் செடி. செடியில் நுண்மயிர் இருக்கும். |