இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
662
சங்க இலக்கியத்
மஞ்சள் தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | எபிகைனே (Epigynae) சைடாமினே (Scitaminae) |
தாவரக் குடும்பம் | : | சிஞ்ஜிபெரேசி (Zingiberaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | குர்குமா (Curcuma) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | லாங்கா (longa) |
சங்க இலக்கியப் பெயர் | : | மஞ்சள் |
தாவர இயல்பு | : | 4-5 அடி உயரம் வரை குத்தாக வளரும் ஓராண்டுச் செடி. தரைக்கு அடியில் மஞ்சள் கிழங்கு இருக்கும். இதுவே மஞ்சளின் தரை மட்டத் தண்டு ஆகும். இதில் கணுக்கள் காணப்படும். நுனியில் முளை விட்டு மேல் நோக்கி எழுந்து, தரைக்கு மேல் இலைகளை விட்டுக் குத்துக் குத்தாக வளரும். |
இலை | : | இலை நீளமானது 18 அங்குலம். அகலம் 8 அங். வரை இருக்கும். நுனி கூரியதாக இருக்கும். |
மஞ்சரி | : | அகன்ற செதில்களை உடையது. வெளிர் பச்சை நிறமானது. 1.5 அங். நீளமானது. 2-7 மலர்கள் உண்டாகும். |
மலர் | : | வெளிர் மஞ்சள் நிறமானது. |
புல்லி வட்டம் | : | குழாய் வடிவானது குட்டையானது. |
அல்லி வட்டம் | : | புனல் வடிவானது; 3 பிளவானது. நீள்முட்டை வடிவானது. பக்கத்துப் பிளவும் மலட்டுத் தாதிழைகள், மஞ்சள் நிறமானவை. |
மகரந்த வட்டம் | : | அகன்ற தாதுத் தாளின் நுனி இரு பிளவானது. தாதுப்பைகள் நீளமானவை. அடியில் ‘ஸ்பர்’ இருக்கும். |