இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தாவரங்கள்
53
வேர்த் தொகுதி | : | சேற்றில் புதைந்துள்ள அடிமட்டத் தண்டு (கிழங்கு) நீர் நிரம்பும் போது தளிர் விட்டு வளரும். நீரின் மேலே இலை, அரும்பு, மலர் முதலியவை காணப்படும். நீர் வற்றிய போது இவை அழிந்து போனாலும் கிழங்கு (அடி மட்டத் தண்டு) அழியாது இருக்கும். |
இலை | : | கிழங்கிலிருந்து உண்டாகும். இலைக் காம்பினால் இணைந்த நீள் முக்கோண வடிவான அகன்ற வேல் இலை போன்ற பசிய இலைகள் நீரில் மிதந்து காணப்படும். இவ்விலை அல்லியின் இலையைப் போலவே அடியில் நீண்ட பிளவுற்றிருக்கும் (அல்லியிலை வட்ட வடிவானது). |
இலைக் காம்பு | : | நீளமானது, நீரளவிற்கும் நீளும் இயல்பிற்று. |
இலை விளிம்பு | : | கூரிய சிறு பற்களை உடையது. பற்கள் இடையீடுபட்டவை. |
இலைப் பரப்பு | : | இருபுறமும் உரோமங்களற்றவை. |
மலர் | : | ஒழுங்கானவை. இருபாலானவை. நீண்ட மலர்க்காம்பின் நுனியில் தனி மலராக வளரும். மலர்க்காம்பு இலைக் கோணத்தில் உண்டாகும். நீலமும் கரு நீலமான மலர். |
புல்லி வட்டம் | : | 3-4 புல்லி இதழ்கள். புறத்தில் கரும் பசிய நிறமானது. உட்புறம் வெளிர் நீலமானது. திருகு அமைப்பானது. |
அல்லி வட்டம் | : | 8-10 நீண்ட வளவிய அகவிதழ்களை உடையது. நீலமும் கருநீலமுமான நிறமான அகவிதழ்கள். சுற்றடுக்காக அமைந்துள்ளன. உள்ளடுக்குகள் சிறிது சிறிதாக மகரந்தத் தாள்களாக மாறும் நிலையில் உள்ளன. |