இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
60
சங்க இலக்கியத்
தாமரை தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுப்பு | : | தாலமிபுளோரே (Thalamiflorae) |
தாவரக் குடும்பம் | : | நிம்பயேசி (Nymphaeaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | நிலம்பியம் (Nelumbium) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | ஸ்பிசியோசம் (Speciosum, ) |
சங்க இலக்கியப் பெயர் | : | தாமரை, கமலம் |
உலக வழக்குப் பெயர் | : | தாமரை, பதுமம், கமலம் |
ஆங்கிலப் பெயர் | : | லோடஸ் (Lotus) |
தாவர இயல்பு | : | நன்னீர்க் கொடி; குளம், குட்டை, பொய்கை முதலிய நன்னீர் நிலைகளில் வளரும். இதில் நிறத்தால் வேறுபட்ட செந்தாமரையும் வெண் தாமரையும் உண்டு. |
தண்டு | : | சேற்றில் அழுந்திய அடிமட்டத் தண்டு கிழங்கு போன்றது. இதன் கணுவிலிருந்து இலைகளும், மலர்களும் உண்டாகும். |
இலை | : | இலை வட்டவடிவமானது (2-3 அடி) ஒரு வகையான கொழுப்புப் பொருள் இலைப் பரப்பில் உள்ளது. அதனால் நீர்த்துளி அதில் தங்குவதில்லை; ஒட்டுவதுமில்லை. |
இலைக் காம்பு | : | 3-6 அடி நீளமானது. சிறுமுட்கள் அடர்ந்தது: இலையின் அடியில் நடுவில் இணைந்திருக்கும். |
மலர் | : | அகவிதழ்கள் செந்நிறமாக இருப்பின் செந்தாமரை எனவும், அவை வெண்ணிறமாக இருப்பின் வெண்டாமரை எனவும் கூறப்படும். நீண்ட முள் நிறைந்த மலர்க் காம்புகளில் முகை உண்டாகும். மலர் அகன்றது. வட்ட வடிவாகத் தோன்றும். பூத்த மலர் மிக அழகானது. நறுமணம் உள்ளது. |