இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தாவரங்கள்
69
இந்தக் கூட்டிலைகளின் கட்கத்தில் மலர்கள் உண்டாகும். பிசுபிசுப்பான துணர்க் காம்பின் நுனியில், காரிம்ப் என்னும் நுனி வளராப் பூந்துணராகத் தோன்றி ரசிமோஸ் முறையில் நுனி வரை மஞ்சரியாக நீண்டு தனி மலர்கள் உண்டாகின்றன. | ||
மலர் | : | இருபால் பூ ஒழுங்கானது; நான்கு அடுக்குப்பூ சமச்சீரானது. மலர்க் காம்பில் தோன்றும். வெண்மை நிறமானது. மலர்ச் செதில் உண்டு. |
புல்லி வட்டம் | : | நான்கு மெல்லிய சிறிய பசுமையான இதழ்கள் முகையில் நேர்முறை இணைப்புடையது. |
அல்லி வட்டம் | : | 6 வெண்மையான, சிறிய விரிந்த இதழ்கள்; நீண்ட இதழ்க் காம்பு காணப்படும். |
மகரந்தத் தாள் | : | 6 மகரந்தத் தாள்கள் நீளமானவை. ஆண் - பெண்ணகக் காம்பின் மேல் ஒட்டியவை. நுனி பரந்தவை. தாதுப் பைகள் இரண்டு. |
தாது | : | மஞ்சள் நிறம். |
சூலகம் | : | ஒற்றை இரு சூலகம். சூலகக் காம்பும், ஆணகக் காம்பும் நீண்டு இணைந்துள்ளன. சூல் முடி-திரண்டு வட்டமாக உள்ளது. கனியிலும் நிலைத்து இருக்கும். |
கனி | : | நீளமானது. 4 செ.மீ. முதல் 8 செ.மீ. மலர்க் காம்புடன் 13 செ.மீ. நீளமும் உள்ளது. இருபுறமும் வெடிக்குமாயினும் அடியிலும், நுனியிலும் ஒட்டியிருக்கும். |
விதை | : | பல குண்டிக்காய் வடிவின. இரு சூலக அறை விளிம்பிலும் ஒட்டியிருந்து சிதறும். |