தமிழ்ப் பழமொழிகள்
35
கடலில் கிடக்கும் துரும்புகளை அலைகளோடு தூக்கித் தரையில் தள்ளுகிறது போல.
கடலில் கையைக் கழுவி விடுகிறதா? 6465
கடலில் துரும்பு கிடந்தாலும் கிடக்கும்; மனசிலே ஒரு சொல் கிடவாது.
கடலில் பிறக்கும் உப்புக்கும் மலையில் விளையும் நாரத்தங்காய்க்கும் தொந்தம்.
- (உறவுண்டு.)
கடலில் பெருங்காயம் கரைத்தது போல.
- (உரசிய காயம் போல.)
கடலில் போட்டு விட்டுச் சாக்கடையில் தேடுகிறதா?
கடலில் மூழ்கிப் போனாலும் கடனில் மூழ்கிப் போகாதே 6470
கடலிலும் பாதி கடம்பாக்குளம்.
கடலின் ஆழத்தை அளந்தாலும் மனசின் ஆழத்தை அளக்க முடியாது.
கடலினுள் நா வற்றினது போல.
- (திருவாசகம்.)
கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
- (போட்டவர்கள்.)
கடலை அடைக்கக் கரை போடலாமா? 6475
கடலைக்காய்ப் பானையிலே கையை விட்டாற்போல.
கடலைத் தாண்ட ஆசை உண்டு; கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
- (கடலைத் தாண்டக் கால் உண்டு.)
கடலைத் தாண்டினவனுக்கு வாய்க்கால் தாண்டுகிறது அரிதா?
கடலைத் தூர்த்தாலும் காரியம் முடியாது.
கடலைத் தூர்த்தும் காரியத்தை முடிக்க வேண்டும். 6480
கடலை விதைத்தால் கடுத்த உரம்.
கடலை விதைப்பது கரிசல் நிலத்தில்.
- (கரிசல் காட்டில்.)