பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

119




நாகப் பாம்பு ஆடினதைப் பார்த்து நாங்கூழ்ப் பூச்சியும் ஆடினதைப் போல. 13860


நாகம் கட்டினால் நாதம் கட்டும்.

நாகரிகப் பெண்ணுக்கு நாக்குத் தூக்கு மிச்சம்.

நாகலோகத்து நஞ்சு அமிர்தம் உண்டவன்.

நாகூர் உபசாரம்.

நாகைக்கும் காரைக்கும் காதம், காரைக்கும் கடவூருக்கும் காதம்; கடவூருக்கும் காழிக்கும் காதம்; காழிக்கும் தில்லைக்கும் காதம். 13865


நாகை செழித்தால் நாடு செழிக்கும்.

(நாகை பழுத்தால்.)

நாங்களும் கங்கணம் கட்டினது உண்டு; கழுத்துக்குக் கங்கணம் கட்டினது இல்லை.

நாங்கை நாலாயிரம்.

(-நாங்கூர்த்திருப்பதியில் நாலாயிரம் குடும்பத்தினர் வைணவர்கள்.)

நாச்சியாரும் ஒன்றைப் பற்றி வார்க்கிறாள்; நானும் ஒன்றைப் பற்றிக் குடிக்கிறேன்.

நாச்சியாரைக் காணாத இடத்திலே முணுமுணுப்பது போல. 13870


நாசியால் போகிற சீவனைக் கண்ட்ர கோடரியால் வெட்டுவதா?

நாசுவக் கிருதும் வண்ணான் ஒயிலும்.

நாசேத்தி மாத்ரா, வைகுண்ட யாத்ரா.

(நாசேத்தி மாத்ரா-என் கை மாத்திரை, தெலுங்கு.)

நாட்கள் பாரேல்.

நாட்டரசன் கோட்டை, நாலு பக்கம் ஓட்டை. 13875


நாட்டாண்மைக் காரனைப் பகைத்துக் கொண்டால் பழைய கந்தாயத்தைக் கேட்பான்.

நாட்டாண்மை யாரடா கொடுத்தார்? நானும் என் பெண்சாதியுமாக வைத்துக் கொண்டோம்.

நாட்டாள் பெற்ற குட்டி, நாகரிகம் பேச வல்ல குட்டி.

நாட்டாளுக்கு ஒரு சீட்டாள்; வெற்றிலை மடிக்க ஒரு வெற்றாளி.

நாட்டாளுக்கு ஒரு நீட்டாளோ? 13880


நாட்டான் பெண்சாதி என்றால் ஏன் என்பாள்; நாலு பேருக்குச் சோறு என்றால் ஊமை எனபாள்.

(ஊம் என்பாள்.)