பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

195



பழைய பகையை எண்ணிப் பழ முள்ளுக் கிளையாதே.

பழைய பெருச்சாளி.

பழைய பொன்னனே பொன்னன்; பழைய கப்பறையே கப்பறை.

பழையனூர் நீலி பரிதவித்து அழுதது போல.

பள்ளத்தில் இருக்கிறவன் பள்ளத்திலே இருப்பானா? 15710


பள்ளத்தில் இருந்தால் பெண் சாதி; மேட்டில் இருந்தால் அக்காள்,

(பெண்டாட்டி, மேட்டில் ஏறினால் தாயார்.)

பள்ளத்துாரான் போனதே போக்கு.

பள்ளத்தைக் கண்டால் பாய்ந்தோடும் தண்ணீர் போல,

பள்ளம் இருந்தால் தண்ணீர் தங்கும்.

(பள்ளம் உள்ள இடத்தில்.)

பள்ளம் இறைத்தவன் பங்கு கொண்டு போவான். 15715

(போகிறான்.)


பள்ளம் உள்ள இடத்திலே தண்ணீர் நிற்கும்.

(பள்ளம் கண்ட.)

பள்ளம் உள்ள இடத்திலே தண்ணீர் நிற்கும்; பயம் உள்ள இடத்திலே பழி போம்.

(கண்ட இடத்திலே.)

பள்ளம் மேடு இல்லாமல் பருத்தி விதைக்கிறது.

(விளைக்கிறது.)

பள்ள மடையில் பாய்ச்சிய நீர் போல.

பள்ளனுக்குப் பல் தேய்த்தால் பசிக்கும்; பார்ப்பானுக்குக் குளித்தால் பசிக்கும். 15720


பள்ளி ஒளித்திரான்; பார்ப்பான் குளித்திரான்.

பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவாது.

(கணக்கன் உதவான்.)

பள்ளிக்கு ஓர் இடம் எச்சில்; பார்பானுக்குக் கண்ட இடம் எல்லாம் எச்சில்,

பள்ளிக் குப்பத்து அப்பட்ட வாத்தியார்.

(பள்ளிக்குப்பத்துக்கு அம்பட்டன் வாத்தியார்.)

பள்ளிக்குப் பத்து மனை. 15725


பள்ளிக்குப் பல்லு. பார்ப்பானுக்கு முழுக்கு.

பள்ளிக்கும் இரும்புக்கும் பதம் பார்த்து அடி.

பள்ளிக்கும் நாய்க்கும் பதம் பார்த்து அடிக்க வேண்டும்.

பள்ளிக்கு வைக்காமல் கொள்ளிக்கு வைத்தான்.

(குறைத்து வைத்தார்.)

பள்ளிக்கூடத்துக்குப் போனால் வாத்தியார் அடிப்பார். 15730