பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

தமிழ்ப் பழமொழிகள்



தாராளக் கையே, தலைமேல் சற்று வையேன்.

தாராளன் தண்ணீர் பந்தல் நீர் சோற்றுத் தண்ணீர் நெய்பட்ட பாடு.

தாராளம் தண்ணீர் பட்ட பாடு; நீர்மோர் நெய் பட்ட பாடு.

தாலாட்டும் பிலாக்கணமும் தரமறிந்து சொல்ல வேணும்.

தாலி அறுத்தவள் ஏன் இருக்கிறாள்: தாரம் தப்பினவனுக்குப் பொங்கலிட. 12510


தாலி அறுத்தவள் வீட்டிலே தடவினது போல.

தாலி அறுத்தவன் வீட்டிலே தலைக்குத் தலை பெரிய தனம்.

(அநுத்தவள் குடித்தனம்)

தாலி அறுத்தவளுக்கு மருத்துவச்சி தயவு ஏன்?

(உதவி.)

தாலி அறுத்த வீட்டில் ஆளுக்கு ஆள் அதிகாரம்.

தாலி அறுப்பான் கல்யாணத்தில் தலைக்குத் தலை நாட்டாண்மை. 12515


தாலி ஒழிந்தது எல்லாம் அமைந்ததாம்; பெண்ணுக்குக் கூறை ஒழிந்தது எல்லாம் கொண்டவன்தானாம் அகமுடையான்.

தாலி கட்டும் பெண்ணின் சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்று விடுமா?

தாலிப் பறி, சீலைப் பறியா?

தாலிப் பேச்சு ஆனாலும் அறுத்துப் பேச்சு.

(செட்டி நாட்டு வழக்கு.)

தாலியை அறுத்துப் பீலி பண்ணினாளாம். 12520


தாவத் தஞ்சம் இல்லா இளங் கொடி போலத் தவிக்கிறாள்.

(தவிக்கிறான்.)

தாழ் இட்டவன் தாழ் திறக்க வேண்டும்.

தாழ்குலத்தில் பிறந்தாலும் புத்தியினால் அரளிப் பூவைப்போல் பிரயோசனப்படுவர்.

தாழ்ந்த இடத்தில் தண்ணீர் தங்கும்.

தாழ்ந்தது தங்கம்; உயர்ந்தது பித்தளை. 12525


தாழ்ந்து நின்றார் வாழ்ந்து நிற்பார்.

தாழ்ந்து பணிதலே தலைமை ஆகும்.

தாழ்மை இல்லாத வாலிபன் வீண்.