62
தமிழ்ப் பழமொழிகள்
தாராளக் கையே, தலைமேல் சற்று வையேன்.
தாராளன் தண்ணீர் பந்தல் நீர் சோற்றுத் தண்ணீர் நெய்பட்ட பாடு.
தாராளம் தண்ணீர் பட்ட பாடு; நீர்மோர் நெய் பட்ட பாடு.
தாலாட்டும் பிலாக்கணமும் தரமறிந்து சொல்ல வேணும்.
தாலி அறுத்தவள் ஏன் இருக்கிறாள்: தாரம் தப்பினவனுக்குப் பொங்கலிட. 12510
தாலி அறுத்தவள் வீட்டிலே தடவினது போல.
தாலி அறுத்தவன் வீட்டிலே தலைக்குத் தலை பெரிய தனம்.
- (அநுத்தவள் குடித்தனம்)
தாலி அறுத்தவளுக்கு மருத்துவச்சி தயவு ஏன்?
- (உதவி.)
தாலி அறுத்த வீட்டில் ஆளுக்கு ஆள் அதிகாரம்.
தாலி அறுப்பான் கல்யாணத்தில் தலைக்குத் தலை நாட்டாண்மை. 12515
தாலி ஒழிந்தது எல்லாம் அமைந்ததாம்; பெண்ணுக்குக் கூறை ஒழிந்தது எல்லாம் கொண்டவன்தானாம் அகமுடையான்.
தாலி கட்டும் பெண்ணின் சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்று விடுமா?
தாலிப் பறி, சீலைப் பறியா?
தாலிப் பேச்சு ஆனாலும் அறுத்துப் பேச்சு.
- (செட்டி நாட்டு வழக்கு.)
தாலியை அறுத்துப் பீலி பண்ணினாளாம். 12520
தாவத் தஞ்சம் இல்லா இளங் கொடி போலத் தவிக்கிறாள்.
- (தவிக்கிறான்.)
தாழ் இட்டவன் தாழ் திறக்க வேண்டும்.
தாழ்குலத்தில் பிறந்தாலும் புத்தியினால் அரளிப் பூவைப்போல் பிரயோசனப்படுவர்.
தாழ்ந்த இடத்தில் தண்ணீர் தங்கும்.
தாழ்ந்தது தங்கம்; உயர்ந்தது பித்தளை. 12525
தாழ்ந்து நின்றார் வாழ்ந்து நிற்பார்.
தாழ்ந்து பணிதலே தலைமை ஆகும்.
தாழ்மை இல்லாத வாலிபன் வீண்.