பக்கம்:தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

—27—

உண்டி விற்கும் பார்ப்பனனுக்கே - தான்
உயர்ந்தவன் என்றபட்டம் ஒழிந்துவிட்டால் - தான்
கண்ட படி விலை உயர்த்தி - மக்கள்
காசினைப் பறிப்பதற்குக் காரண முண்டோ? - சிறு
தொண்டு செய்யும் சாதிஎன்பதும், - நல்ல
துரைத்தனச் சாதியென்று சொல்லிக்கொள்வதும், - இவை
பண்டிருந்த தில்லை எனினும் - இன்று
பகர்வது தாங்கள் நலம் நுகர்வதற்கே - நாம் (என்று)

***


வேதமுணர்ந் தவன் அந்தணன் - இந்த
மேதினியை ஆளுபவன் க்ஷத்திரியனாம் - மிக
நீதமுடன் வர்த்தகம் செய்வோன் - மறை
நியமித்த வைசியனென் றுயர்வு செய்தார் - மிக
நாதியற்று வேலைகள் செய்தே - முன்பு
நாத்திறம் அற்றிருந்தவன் சூத்திரன் என்றே - சொல்லி
ஆதியினில் மநுவகுத்தான் - இவை
அன்றியுமே பஞ்சமர்கள் என்பதும் ஒன்றாம் - நாம் (என்று)