பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

சமுதாய விடுதலைப் போரில் திராவிடர் இயக்க இதழ்கள்




சாமி சிதம்பரனாரின்

‘லோகோபகாரி’ இதழ்

சாமி சிதம்பரனார், ‘அறிவுக் கொடி’ என்ற பத்திரிகையை இரண்டாண்டுகள் நடத்தி, பகுத்தறிவுக் கொள்கையைப் பிரச்சாரம் செய்தார். அதற்கடுத்து ‘லோகோபகாரி’ என்ற பத்திரிகைக்கும் ஆசிரியராக இருந்து, அதில் இலக்கிய ஆய்வுகளைப் பகுத்தறிவு பார்வையுடன் எழுதி வெளியிட்டார்.

பெரியாரின் செங்கற்பட்டு மாநாட்டின் தீர்மானத்திற்கு முதலோடியாக, சுயமரியாதைத் திருமணம், கலப்புத் திருமணம, குறிப்பாக சிவகாமி அம்மையாரை விதவைத் திருமணமாக, 1930-ஆம் ஆண்டில் பெரியார் மனைவி நாகம்மையார் தலைமையில் செய்து கொண்ட புரட்சியாளர் சாமி. சிதம்பரனார்.

சுயமரியாதை இயக்க உணர்ச்சிக்களை, அதே நேரத்தில் பொதுவுடைமைக் கட்சிச் சார்புடனும், தனது எழுத்துக்களை ஆட்சி செய்த ‘லோகோபகாரி’யாக நடமாடிய பத்திரிகையாளரெனப் புகழ் பெற்று வாழ்ந்தவர் சாமி. சிதம்பரனார்.

ஜீவா, ‘ஜனசக்தி’,

‘தாமரை’ இதழ்கள்

ப. ஜீவானந்தம், காரைக்குடிக்கு அருகே சிராவயல் என்ற சிற்றூரில் உள்ள காந்தி ஆசிரமத்தில் தொண்டாற்றிக் கொண்டிருந்தபோது, காந்தியடிகள் அங்கே வருகை தந்தார். அவரிடம் ஜீவா, பகவத் கீதையில் உள்ள வருணாசிரமத்தைப் பற்றி விளக்கம் கேட்க விரும்பினார்.

“பிராமணனாகப் பிறந்து தீய ஒழுக்கமுடைய ஒருவன் - சூத்திரன் தானே? என்ற வினாவை, ஜீவா - காந்தியடிகளிடம் கேட்டார். உடனே அண்ணல் காந்தி, ‘இல்லை, அவன் கெட்ட பிராமணன்’ எனும் படு அடிமைத்தன்மை தேங்கிய விடையைப் பெற்ற அந்த நொடிதான், ஜீவாவின் வாழ்க்கையில் உண்டான திருப்புமுனை!

சேரன்மாதேவியில் வ.வே.சு. ஐயர் நடத்திய குருகுல சாதிபேத உரிமைக் கிளர்ச்சியில் அக்கறை காட்டிய ஜீவா, அந்த