பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

374

பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டி கார்ல் மார்க்ஸ்!



ஜெர்மன் நாட்டின் பான் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகச் சேர்ந்து பணியாற்ற விரும்பிய கார்ல் மார்க்சுக்கு அப்போது அங்கே நடைபெற்றக் கொடுங்கோல் ஆட்சியில் தனக்கு ஆசிரியர் பணி கிடைக்காது என்று எண்ணி வேறு வேலை ஏதாவது தேடலாம் என்று அலைந்தார்.

அந்த அலைச்சலின் முடிவுதான் பத்திரிகை ஒன்றைத் துவக்கலாம் என்று திட்டமிட்டு, 1842-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், ‘ரைன்லாந்து கெசட்’ என்ற பத்திரிகையிலே பல கட்டுரைகளை எழுதி வந்தார். சில மாதங்களுக்குப் பிறகு அதே பத்திரிகைக்கு ஆசிரியரானார்.

மார்க்ஸ் தான் எழுதும் கட்டுரைகள் ஒவ்வொன்றையும், குறிப்பிட்ட அந்த சம்பவங்களை நேரில் போய் பார்த்து விட்டே வந்து, எழுதி வந்தார். அவர் எழுதும் எல்லாக் கருத்துக்களும் அவரது பார்வைக்குப் பிறகே அச்சேறின.

ஜெர்மன் கொடுங்கோல் அரசு அதிகாரிகள், செல்வச் சீமான்கள், அப்போதைய அரசியல்வாதிகள் பலரும், மார்க்ஸ் எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் ஊன்றிப் படிக்கும் சூழ்நிலை இருந்ததால், பத்திரிகைச் செல்வாக்கு அவர்கள் இடையே அதிகமாயின. அதனால் அதன் விற்பனையும் பெருகின.

‘ஆட்சிக்காகவே மக்கள் இருக்கிறார்கள் என்ற ஆட்சிப் போக்கை மாற்றி, மக்களுக்காகவே ஆட்சி இருக்கிறது என்ற கருத்தை நிலைநாட்டி மார்க்ஸ் பத்திரிகையை நடத்தி வந்தார்’.

இதனால் அரசு கண்காணிப்பு அதிகாரிகளின் ஒற்றாடல் வேலைகள் நாளுக்கு நாள் அதிகரித்தன. பத்திரிகையைக் கண்காணிப்பு செய்ய அதிகாரி ஒருவரை அந்த அரசு நியமித்தது. அவருடைய மேலாண்மை இல்லாமல் பத்திரிகையை வெளியிடக் கூடாது என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இரஷ்யாவில் நடைபெறும் ஏதேச்சாதிக்கார ஆட்சி முறைய மார்க்ஸ் கண்டனம் செய்து பத்திரிகையை வெளியிட்டார். அப்போது ஜெர்மன் அரசுக்கும் இரஷிய அரசுக்கும் நட்புக் கூட்டணி இருந்ததால், இரஷியாவைக் கண்டித்து எழுதக் கூடாது என்று ஜெர்மன் அரசு ஆணையிட்டது.

அரசு நிர்பந்தங்களுக்கு உட்பட்டுத்தான் பத்திரிகை வெளிவர வேண்டும் என்று ஜெர்மன் அரசு பத்திரிகைச்