எஸ்.டி. சுந்தரம் - 137
அமைந்தது. இத்தப் பரம இரகசியத்தை மன்மத சகாபன் மட்டும் அரைகுறையாகக் கேள்விப்பட்டி ருத்தான். அதைக் கொண்டே அவன் இன்ப வாகனனை மிரட்டி, பெரும்பதவி பெற்றதும், தன் பெண் இன்பக்கொடியை ராணியாக்க விரும்புவதும்.
காண்பதெல்லாம் இன்பமாகத் தோற்றுகிறது. ஞான தேவனுக்கு பாடுகிறான்.
பாட்டு
ஞான
பெண் :
ஞான
பெண்
ஞான
ஞான
பெண் :
ஒசைகூட்டி திசைக ளெல்லாம்
பேசுகின்ற இன்பமே ஆசைமீட்டிமீட்டி அல்லல் ஒட்டி
ஆடுகின்ற செல்வமே பாசமான பருவ மேனிப்
போர்வையோ நீ சொல்லுவாய் வீசுகின்ற வாசக் காற்றுன்
வாலிபத்தின் வெள்ளமோ? (முன்காட்சிகளின் வந்த அதே அடிமைப்பெண் வில்வி வந்து அவன் பாட்டுக்கேற்றபடி ஆட முயற்சிக்கிறாள், பெண்ணே! அழைக்காமல் நீயாக வந்து அசைவது ஏன்? ஏன்? பார்க்க அழகாயில்லை?
அப்படி நான் சொல்லவில்லை. அவசியமற்ற இடத்தில் அழகைச் சிந்துவதால் பயன்?
மகாப்பிரபு குறிப்பறிந்து உங்களுக்கு இன்பந்தர வேண்டுமென்பதே எனக்குள்ள புதுக்கட்டளை.
கட்டளையா! யாரிட்டது?
மகாப்ரபு மன்மதசகாயர்.
அந்தப் புண்யாத்மாவா?
ஆமாம். நான் ஆடாவிட்டால் தண்டிப்பார்.