பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருத்தியும் மகனும் 139 இன்றியும் என்னை விட்டுவிட்ட அந்தக் கடவுளை நினைத் தாலும், அனைத்திலும் கை கொடுத்து 'அஞ்சேல்' என ஆதரிக்கும் தன்மையில் என் அன்னையார் எனது துன்பம் துடைக்க நிற்பதை அறிந்து உள்ளம் தேறினேன். ஆனல் என் அன்னையின் துன்பத்தை ஆற்றுவார் யார் என்றே என் உள்ளம் கேட்டுக்கொண்டே இருந்தது. அப்போது தான் கோயிலுக்குச் சென்று திரும்பி வந்துகொண்டிருந்த பாட்டியார் எல்லாம் அவன் செயல், நம்மால் ஒன்று மில்லை என்று யாரிடமோ கூறிக்கொண்டே உள்ளே நுழைந்தார்கள். ஆம் ! என் அன்னையாரும் அந்த எண் ணத்திலேயே யாருடைய உடன் உதவியும் இன்றி என்னைத் தான் வாழும் வரையில் காத்து ஒரளவு வாழ்வில் உயரவழி செய்து வைத்தார்கள். அவர்களை நினைக்கும் போதெல்லாம் அந்தப் பாட்டும் என்னைவிட்டு அகலுமோ !