இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 101
உள்ளத் திறைவனை ஒப்பாது, பார்ப்பான்
கள்ளத்துத் தோற்றிய கயவருக் கெல்லாம்
படிவம் சமைத்து, விழாப்பல வெடுப்பாய்!
விடிவிலா இருளுள் விழுந்து கிடப்பாய்!
இனமும் மொழியும் வழியும் கெட்டு
மனமும் கெட்டு மழுங்கினாய் தமிழா!
இனியா கிலும்விழி; இழிவை அகற்று!
பனியும் மழையும் வெயிலும் பாராது
கடமையைச் செய்நீ! மடமையை உதறு!
உடைமையை நீபெறும் நாளுமொன் றுண்டே!
-1969
60 விடுதலை பிறக்கும்!
வடவர்க்கும் பார்ப்பனர்க்கும் வால்பிடித்தே
வாழுகின்ற நிலையைப் பெற்றே
படநிற்கும் நெடுமரம்போல் பாயிழந்த
மரக்கலம்போல் பற்றி ழந்தே
கெடநிற்கும் தமிழா,உன் கீழ்மையினை
ன்றுணர்ந்து கிளர்.வா யானால்
தொடநிற்கும் பெருந்துயரும் தூளாகும்
விடுதலையும் தோன்றும் அன்றே!
-1969