பக்கம்:கள்வர் தலைவன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காட்சி-1]

கள்வர் தலைவன்

11

ஏ.அப்பா, எப்பொழுது நீ என துயிரைக்காப்பாற்றினாயேர் அப்பொழுதே நான் உனக்கடிமையாகி விட்டேன். உன் சொற்படி நான் நடவாமற் பேவேனோ! எப்படியாவது நான் எனது பெண்சாதி பிள்ளையையும் தங்தை தாயாரையும் பார்த்தாற் போதும். ஆனால், உன்னால் என்ன முடியும் ? அதிருக்கட்டும், அப்பா, இவ்வளவெல்லாம் கேட்டுக் கொண்டு வந்த நீ இன்னானென்று எனக்குக் கூற வில்லையே, அப்பா, நீ யார்?
ஜெ.(தனக்குள்) நான் !-நான்!-சாம்பிணம்-நான் இக்காட்டிலுள்ள கள்வர்களுக்கெல்லாம் தலைவன். நாயனார் வயத்தான் முதலிய கள்வரெல்லாரும் திரும்பிவருகிறார்கள்.
ஜெ.நாயனர், பூஜையெல்லாம் சரியாக நிறைவேறிற்றா?
நா.எல்லாம் தங்களுடைய கருணையினால் சரியாக ஆயிற்று. இதோ பிரசாதம். [புஷ்ப முதலியவற்றைக் கொடுக்கின்றான்.] அடே! கருப்பண்ணசாமி அருளினால் நம்முடைய சுவாமிக்கு சகல நன்மையு முண்டாகக் கடவது !
எல்.ஜெய !
நா.நமக்கெல்லாம் கூேடிமமும் ஐஸ்வரியமும் கிடைக்கக்கடவது !
எல்.ஜெய !
நா.நம்முடைய பகைவரெல்லாம் அழியக்கடவது!
எல்.ஜெய !
வ.நம்பளுக்கெல்லாம் ரொம்ப ஆடும் தேங்காயும் கெடைக்கக் கடவது! ஜெய! - அடெ ஜெய சொல்லுங்கடா, தேங்காயும் ஆடும் திண்ணுாட்டு வல்லே?
ஜெ.நாயனார், எல்லோரும் வந்து இப்படி என் எதிராக நில்லுங்கள். நான் இதுவரையில் உங்களுக்குத் தலைவனாக இருந்தேனல்லவா ? இப்பொழுது எனக்கு தேச சஞ்சாரம் செய்து ஆங்காங்குள்ள தேக்ஷத்திரங்கள் முதலிய வைகளைப் பார்த்துவிட்டு வரவேண்டுமென்று ஒரு ஆசையுண்டாயிருக்கின்றது. ஆகவே நான் போய்த் திரும்பி வருமளவும் இதோ இருக்கும்படியான என் பிராண சிநேகிதரை உங்களுக்குத் தலேவனாக ஏற்படுத்துகின்றேன். தேசசஞ்சாரம் முடிந்து நான் திரும்பி வருமளவும் இவரே உமது தலைவர். (தானணிந்திருந்த முடியை ஏமாங்கதன் தலையில் தரிக்கின்றான்.)
ஏ.அப்பா ! இந்தவேலை என்னத்திற்கு எனக்கு வேண்டாம் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/15&oldid=1556308" இலிருந்து மீள்விக்கப்பட்டது