பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| கவியரசர் முடியரசன் - -- – 189 | பெறுகிறாய். உண்மைதான், கற்றுணர்ந்த சான்றோரின் வாய்மொழிகளைக் கேட்குங் காலத்து, நீ முன்பு கல்வியாற் பெற்ற அவ்வறிவு, வலிவும் பொலிவும் பெறுகிறது. கல்வி கற்க வாய்ப்பில்லாதவர்கள், அவ்வாய் மொழிகளைக் கேட்பார்களானால் அவர்க்கு நல்லறிவு உண்டாகிறது. கற்றவர் பெற்ற அறிவுக்கு உரத்தைக் கொடுக்கிறது; கல்லாதார்க்கு அறிவைக் கொடுக்கிறது. அதனால் கேள்விச் செல்வம், அறிவு பெற்றவர்க்கும் பயன்படுகிறது; அதனைப் பெறாருக்கும் பயன்படுகிறது. பன்மொழிப் புலவரொருவர் 'அருளாளர் என்ற தலைப்பில் இராமலிங்க அடிகளைப் பற்றிச் சொற்பொழிவாற்றியதாகவும், அப்பொழிவைக் கேட்டின்புற்ற தாகவும் முன்பொரு கடிதத்தில் எழுதியிருந்தாயல்லவா ? அதனை நினைவுபடுத்திக்கொண்டால் கேள்விச் செல்வத்தின் அருமைப்பாட்டை நன்குணர்வாய். நீ எவ்வளவு நாள் பயின்றாலும் இராமலிங்கரைப் பற்றியும், அருட்யாவைப் பற்றியும் அவ்வளவு தெரிந்துகொள்ள முடியுமா ? தெரிந்து கொண்டாலும் புரிந்துகொள்ள முடியுமா ? ஒரிரு மணி நேரத்தில் எவ்வளவு செய்திகளைப் புரிந்து கொண்டாய் ! கேள்விக்கு அவ்வளவு ஆற்றலுண்டு. இத்தகைய ஆற்றல் கொண்ட கேள்வியைச் செல்வம் என்று சொல்வதுடன் அமையாது, சுவையென்றுங் கூறுவர். இன்பம் பயக்குங் காரணம் பற்றி, அதனை அவ்வாறு கூறுவர். சுவையை, இரண்டென்று பாகுபாடு செய்யலாம். ஒன்று வாய்ச்சுவை; மற்றொன்று செவிச்சுவை. இனிப்பு, புளிப்பு முதலிய அறுசுவைகளே வாய்ச்சுவை எனப்படும். கேள்வி,