தாவரங்கள்
149
சிவ பரம்பொருளுக்கு ஒரு பச்சிலை என்று கூவிளத்தின் இலைகளைக் கொண்டு வழிபடுவர். தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் வில்வத்தின் இலைகளைத் தொடுத்த கண்ணியைப் பொன்னால் செய்து அணுக்கத் திருவறையில் அருவுருவாகிய ஆண்டவனுக்குச் சூட்டியுள்ளனர்.
சுந்தரர் இதனைச் சிவபிரான் சூடும் மலராகப் பாடியுள்ளார்.[1] எழு பெரும் வள்ளல்களில் ஒருவரான ‘எழினி’ என்பான், குதிரை மலைக்குத் தலைவன். அவன் தன் அடையாளப் பூவாக இதனைச் சூடினான் என்பர்.
“ஊரனது ஏந்திய குதிரைக் கூர்வேல்
கூவிளங்கண்ணிக் கொடும் பூண் எழினி”
-புறநா: 158 : 8-9
மேலும், ஒரு தலைமகன் காட்டு மல்லிகை மலருடன் சேர்த்துத் தொடுத்த கண்ணியைச் சூடி வருகுவன் என்பார் பெருங்குன்றூர்க் கிழார்.
“பெருவரை கீழல் வருகுவன் குளவியொடு
கூவிளந் ததைந்த கண்ணியன் யாவதும்
முயங்கல் பெருகுவன் அல்லன்”-நற்: 119 : 8-10
அன்றியும், பகைவரது தலைகளாகிய அடுப்பில், கூவிள மரத்தின் விறகைக் கொண்டு எரிப்பர் என்று புறநானூறு கூறுகின்றது.
“பொருந்தாத் தெவ்வர் அரிந்ததலை அடுப்பில்
கூவிள விறகின் ஆக்குவரி நுடங்கல்”
-புறநா: 372 : 5-6
கூவிளம்—வில்வம் தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | டிஸ்கிபுளோரே |
தாவரக் குடும்பம் | : | ரூட்டேசி |
- ↑ நாறு கூவிள நாகுவெண் மதியத்தொடு
ஆறுசூடும் அமரர் பிரான்-சுந். தேவா: காய்: 3