இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
186
சங்க இலக்கியத்
தாவரப் பேரினப் பெயர் | : | மாஞ்சிபேரா ((Mangifera) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | இன்டிகா (indica) |
தாவர இயல்பு | : | பெரிய மரம். கிளைத்து, உயர்ந்து, பல்லாண்டு வளரும். 20மீ உயரமான பசிய மரம். |
தாவர வளரியல்பு | : | மீசோபைட் |
இலை | : | நீண்ட தனியிலைகள். மாற்றடுக்கில் இலைக் காம்புடன் இருக்கும்; தோல் போன்று தடித்தது. இலையடிச் சிதல் இல்லை. |
மஞ்சரி | : | கலப்புப் பூந்துணர்; நுனிக்குருத்து மாந்தளிராகவோ, பூந்துணராகவோ வளரும். |
மலர்கள் | : | சிறியவை. பல பாலானவை. பூக்காம்பு இணைந்திருக்கும். பூவடிச் சிதல்கள் முதிர்ந்தவுடன் உதிரும். |
புல்லி வட்டம் | : | 4-5 பிரிவானது.திருகு அமைப்பானது. |
அல்லி வட்டம் | : | 4-5 பிரிந்தும், வட்டத் தட்டோடு ஒட்டியும் இருக்கும். |
வட்டத் தண்டு | : | சதைப்பாங்கானது; 4- 5 மடலாயிருக்கும். |
மகரந்த வட்டம் | : | 1-8 வட்டத் தட்டின் உட்புறமாகச் செருகப்பட்டிருக்கும். ஒரு மகரந்தத் தாள்தான் வளமானது. ஏனையவை வளமற்றவை. மகரந்தப் பை ஒரு சுரப்பி கொண்ட முனையுடன் இருக்கும். |
சூலக வட்டம் | : | சூற்பை காம்பற்று ஒரு சூலறை கொண்டு சாய்வாக அமைந்திருக்கும். |
சூல் தண்டு | : | குட்டையானது. சூல்முடி எளிமையானது |
சூல் | : | அடித்தளத்தில் ஊசல் போல அமைந்தது. |