தாவரங்கள்
239
“எரிஅகைந் தன்ன வீததை இணர
வேங்கையம் படுசினை”-நற். 379 : 2-3
வேங்கை மலரின் செம்மை கலந்த மஞ்சள் நிறத்தைப் பொன்னிறமென்று புலவர்கள் பாடுவர்.
“புலவரை வேங்கைப் பொன்மருள் நறுவீ”-ஐங். 217 : 1
“அரும்புவாய் அவிழ்ந்த கருங்கால் வேங்கைப்
பொன்மருள் நறுவீ”நற். 257 : 5-6
மலரின் அகவிதழ்களே இந்நிறமுடையன. இதன் புறவிதழ்கள் ‘தகடு’ எனப்படும். இவை சற்றுக் கரிய நிறமானவை என்பர் புலவர்.
“கருங்கால் வேங்கை மாதகட்டு ஒள்வீ”-ஐங். 219 : 1
“அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை
மாதகட்டு ஒள்வீ”-புறநா. 202 : 18-19
“கார்அரும்பு அவிந்த கணிவாய் வேங்கை”-நற். 373 : 6
புறநானூற்றுப் பழைய உரைகாரரும் மேற்கண்ட அடிகட்கு, ‘வேங்கையினது கரிய புறவிதழையுடைய ஒள்ளிய பூ’ என்றார். இதன் இணரில் முழுதும் அலராது உள்ள முகைகள் செந்நெல் போன்று காட்சி தருமென்பர் அவ்வையார்.
“அகடுநனை வேங்கைவீ கண்டன்ன
பகடுதரு செங்நெல்”/b>-புறநா. 390: 21-22
இளமங்கையர்க்கு இன்பப் பூரிப்பால் மார்பிடங்களில் படரும் அழகுத் தேமையைப் புலவர்கள் ‘சுணங்கு’ என்பர். இச்சுணங்கிற்கு வேங்கைப்பூ உவமையாகவும், பெருவழக்காகவும் அமைந்தது.
“பொன்வீ வேங்கைப் புதுமலர் புரைய
நன்னிறத் தெழுந்த சுணங்கணி வனமுலை”
-அகநா. 319 : 8-9
வேங்கை நன்னாள் கூறி மலரும் பருவம் கார்ப் பருவமாகும்; அதிலும், முழு நிலவுக் காலத்தில் பூக்கும் என்பர் கபிலர்.