இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
274
சங்க இலக்கியத்
ஆவிரை தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | அகவிதழ் பிரிந்தவை-காலிசிபுளோரே |
தாவரக் குடும்பம் | : | சிசால்பினியே (Caesalpineae) |
தாவரப் பேரினப் பெயர் | : | காசியா (Cassia) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | ஆரிகுலேட்டா (auriculate) |
தாவர இயல்பு | : | ஓரிராண்டுகள் வாழும் புதர்ச் செடி. |
தாவர வளரியல்பு | : | மீசோபைட். மற்றும் அளர் நிலத்திலும் வளரும். |
இலை | : | அடியிலும், முடியிலும் குறுகிய 8-12 சிற்றிலைகளைக் கொண்ட பசிய கூட்டிலை. |
இலையடிச் செதில் | : | சிறப்பானது. இலையடிக் காம்பின் இரு புறத்திலும் அகன்ற இதய வடிவான (காது வடிவான) பசிய இலையடிச் செதில்கள் காணப்படும். |
மஞ்சரி | : | கிளை நுனியில் ஆனால் இலைக் கோணத்தில் நுனி வளராப் பூந்துணர் கொத்தாகத் தோன்றும். ‘காரிம் போஸ்’ எனப்படும். |
மலர் | : | பளிச்சென்ற மஞ்சள் நிறமானது. பெரியது. 2-3 செ.மீ. நீள, அகலமுடையது. ‘விரிமலர் ஆவிரை’ என்பது பொருந்தும் அளவுக்கு அகவிதழ்கள் விரிந்து மலரும். |
புல்லி வட்டம் | : | 5 சிறிய பசிய புறவிதழ்கள் அடியில் இணைந்து மேலே பிரிந்து இருக்கும். |
அல்லி வட்டம் | : | சிறந்த மஞ்சள் நிறமான அகன்ற 5 அகவிதழ்கள் அடி தழுவிய அமைப்பில் ஏறக் குறைய ஒரு மாதிரியாகவே இருக்கும். இதழ்கள் நன்கு பிரிந்து, பளபளப்பாகவே தோன்றும். |