318
சங்க இலக்கியத்
நாவல் பழத்தின் சாறு ஊதா நிறமானது. பொன்னால் செய்த அணிகலன்களை இச்சாற்றில் ஊற வைத்தால், கலன்களின் நிறம் வேறுபட்டு ஊதா நிறமாக விளங்கும்.
இவ்வணிகலன்களை மகளிர் சூடிக் கொள்வர்.
“நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழை”
-திருமுரு. 18
இதற்கு ‘நாவற்பழச்சாறு பட்டுப் பேதமான பொன்னால்’ என்பது பழைய உரை. ஆனால் ‘சம்பூந்தமென்று நாவலோடடுத்துப் பெயர் பெற்ற பொன்னால் நிருமித்து விளங்குகின்ற பூணினையும்’ என்று நச்சினார்க்கினியர் உரை கூறுவார்.
இதன் உண்மையை ஆய்தற் பொருட்டு, நாவற்பழச் சாற்றிலே பொன் மோதிரத்தை இருபத்து நான்கு மணி நேரம் ஊற வைத்துப் பார்த்தோம். மோதிரம் ஊதா நிறமாகி விட்டது. நீரில் கழுவிப் பார்த்தும் நிறம் குலையவில்லை. ஆனால், பதினைந்து நாள்களுக்குப் பின்னர் மோதிரத்தின் ஊதா நிறம் கரைந்து பொன்னிறமாகி விட்டது.
கடற்கரை மணலில் உதிர்ந்த நாவற்பழத்தைக் கரிய தன் இணையெனக் கருதி மொய்த்ததாம் ஒரு தும்பி. இதனை அம்மூவனார் என்ற புலவர் கூறுகின்றார்.
“பொங்குதிரை பொரு வார்மணல் அடைகரைப்
புன்கால் நாவல் பொதிப்புற இருங்கனி
கிளை செத்து மொய்த்த தும்பி”-நற். 35 : 1-3
நாவல் தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | காலிசிபுளோரே (Calyciflorae) மிர்ட்டேலீஸ் (Myrtales) |
தாவரக் குடும்பம் | : | மிர்ட்டேசி (Myriaceae) |