இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாவரங்கள்
323
இலை | : | இலைக் காம்பு 0.5 அங்குல நீளமானது. நீள் முட்டை வடிவானது. அடியும், நுனியும் குறுகி இருக்கும். 7 அங்குல நீளமும், 3-3.5 அங்குல அகலமும் உள்ளது. இலைக் காம்பில், இலையின் அடியில் இரு சுரப்பிகள் உள்ளன. இலை முழுதும் அடியில் மங்கலான வெள்ளிய நுண்மயிர்களால் மூடப்பட்டிருக்கும். : |
மஞ்சரி | : | “ஸ்பைக்ஸ்” என்ற பூந்துணர் கிளை நுனியில் உண்டாகும். மலரடிச் செதில் உண்டு. கலப்பு மஞ்சரியாகவும் இருக்கும். |
மலர் | : | இருபாலானது. |
புல்லி வட்டம் | : | 4-5 புறவிதழ்கள் இணைந்து, குழல் வடிவாக இருக்கும். மேலே 4-5 பிளவுகள் காணப்படும். |
அல்லி வட்டம் | : | 4-5 அகவிதழ்கள். |
மகரந்த வட்டம் | : | 8-10 தாதிழைகள். |
சூலக வட்டம் | : | ஒரு செல் உள்ளது. சூலகம் மேற்புறத்தில் பிளவுடன் இருக்கும். 2-3 சூல்கள் உண்டாகும். |
கனி | : | பளபளப்பானது. முட்டை வடிவானது புறத்தில் 5 விளிம்புகளை உடையது. 1.5 X 1 அங். உயர, அகலமானது. |
இதில் மிக உயர்வான ‘டானின்’ உண்டாகிறது. ஒரு வகை மஞ்சள் நிறப் பொருள் இதிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மரம் கரிய பழுப்பு நிறமானது. மிக வலியுடையது. கட்டிடங்களுக்குப் பயன்படும். கடுக்காய் மிகச் சிறந்த சித்த மருத்துவப் பொருள். பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகின்றது. இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 14 என நந்தா (1962)வும், 2n = 24,48 என சானகி அம்மாளும் (1962), சோப்தி (1962 ஏ) 2n = 26 என சென். எஸ் (1955 பி) என்பாரும் கணித்துள்ளனர்.