22
சங்க இலக்கியத்
ஆம்பற் கொடியின் வேர்த் தொகுதியில் கிழங்கு இருக்கும். இக்கிழங்கு உணவாகப் பயன்படும். ஆம்பற் கிழங்கொடு புலால் நாற்றமுள்ள ஆமையின் முட்டையுடன் பரிசிலர் பெறுவர் என்ப:
“யாமை ஈன்ற புலவுநாறு முட்டையைத்
தேனாறு ஆம்பற் கிழங்கொடு பெறூஉம்”
ஆம்பலின் இலைகளைக் கொய்து தழையணி கூட்டுவர் மகளிர்.
‘நீரில் வளர்ந்த வெள்ளாம்பலினது அழகிய மாறுபடக் கூடிய நெறியுடைய தழையுடையானது தேமலை உடைய துடையின் கண்ணே மாறி மாறி அசைய, சேயிழையுடைய பரத்தை அவ்விடத்தே வருமே’ என்று அஞ்சுகிறாள் ஒரு தலைவி :
“அய வெள்ளாம்பல் அம்பகை நெறித்தழை
தித்திக் குறங்கின் ஊழ்மாறு அலைப்ப
வருமே சேயிழை அந்தில்”
“ஆம்பல் அணித்தழை ஆரத் துயல்வரும்
தீம்புன லூரன் மகள்[1]”
“அளிய தாமே சிறுவெள் ளாம்பல்
இளைய மாகத் தழையா வினவே
இனியே, பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத்து
இன்னா வைகல் உண்ணும்
அல்லிப் படூஉம் புல்லா யினவே”
ஆம்பல் மலர் ஆடவர் சூடவும், அணியவும் பயன்பட்டது.
“வன்கை வினைஞர் அருவி ஆம்பல் மலைந்த சென்னியர்”
நீலம், அல்லி, அனிச்சம், முல்லை முதலியவற்றைக் கண்ணியாகப் புனைந்து சூட்டிக் கொள்வர். (கலி. 91 : 1)
ஆம்பல் மலரை மகளிர் வாய்க்கு உவமிப்பர்.
- ↑ திணை மொ. ஐ. 40