இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
364
சங்க இலக்கியத்
மராஅம்–வெண்கடம்பு தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | இன்பெரே (Inferae) அகவிதழ்கள் இணைந்தவை. |
தாவரக் குடும்பம் | : | ரூபியேசி (Rubiaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | ஆன்தோசெபாலஸ் (Anthocephalus) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | இன்டிகஸ் (indicus,Rich.) |
இதன் முன்னைய தாவரப் பெயர் | : | ஆன்தோசெபாலஸ் கடம்பா |
தாவர இயல்பு | : | பருத்துக் கிளைத்து உயரமாக வளரும் பெரிய மரம். வறண்ட நிலத்திலும், 1500 அடி உயரமான மலைப் பாங்கிலும் உயர்ந்து வளரும். எடுப்பான தோற்றம் உள்ளது |
இலை | : | முட்டை வடிவான 6 அங்குலம் அகன்ற தனி இலை, ஓர் அடி நீளமானது. இலைச் செதில்கள் ஈட்டி போன்றன. எளிதில் உதிர்வன. |
மஞ்சரி | : | கொத்தாகப் பூக்கும். இணர்க்காம்பு உள்ளது. கிளை நுனியில் வெள்ளிய பூங்கொத்து திரண்டு தோன்றும். இவ்விணர் ‘ஹெட்’ எனப்படும். |
மலர் | : | மங்கிய வெள்ளை நிறமானது. ஐந்தடுக்கானது. நறுமணம் உள்ளது. |
புல்லி வட்டம் | : | 5 புறவிதழ்கள் அடியில் இணைந்து குழல் போன்றிருக்கும். மேலே 5 பிரிவுகளை உடையது. |
அல்லி வட்டம் | : | 5 அகவிதழ்கள் இணைந்து அடியில் நீண்ட குழலுடன் புனல் வடிவானது. மேலே 5 மடல்கள் தழுவிய ஒட்டு முறையில் காணப்படும். பளபளப்பானவை. |