இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாவரங்கள்
513
மணமற்றதாயினும், இதன் எழிலான தோற்றம் கருதிப் பூ கிடைக்காத இடங்களில் இதனையும் சூடி ஆடுவர் பாலை நில வழியில் கூத்தர் என்கிறார் அதியன் விண்ணத்தனார்.
“குவியிணர் எருக்கின் ததர் பூங்கண்ணி
ஆடுஉச் சென்னி தகைப்ப”-அகநா. 301 : 11-12
எருக்கம் பூவை, மடலேறும தலைமகன் கண்ணியாகச் சூடிக் கொள்வான்.
“மாஎன மடலும் ஊர்ப்பூ எனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப”-குறுந். 17 : 1-2
இச்செடியில் உண்டாகும் பால் கொடியது. ஆனால், மருந்துக்குப் பயன்படுவது. வெள்ளெருக்கின் நாரை எடுத்துக் குழந்தைகட்குக் கடிப்பகையாகக் கட்டுவர்.
எருக்கு தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | பைகார்ப்பெல்லேட்டே (Bicarpellatae) அகவிதழ்கள் இணைந்தவை. |
தாவரக் குடும்பம் | : | ஆஸ்கிளிப்பியடேசி (Asclepiadaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | கலோடிராப்பிஸ் (Calotropis) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | ஜைஜான்டியா (gigantea) |
தாவர இயல்பு | : | புதர்ச் செடி. பாழ்பட்ட வெற்றிடங்களில் வளர்வது. வெள்ளிய மலரின் நிறத்தைக கொண்டு வெள்ளெருக்கும், வெளிர் நீல மலரின் நிறத்தினால் யாண்டும் வளரும் மற்றொரு எருக்கஞ் செடியும் உள்ளன. |
மஞ்சரி | : | நுனி வளராப் பூந்துணர்; கலப்பு மஞ்சரியாகவும் வளர்வதுண்டு. கிளை நுனியில் கொத்துக் கொத்தாகத் தோன்றும். |
73-33