இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
520
சங்க இலக்கியத்
“. . . . . . . . . . . . அடும்பின்
தார்மணி அன்ன ஒண்பூக் கொழுதி,
ஒண்டொடி மகளிர் வண்டல் அயரும்”-குறுந் 243 : 1-3
“ஆய்பூ அடும்பின் அலர்கொண்டு உதுக்காண்எம்
கோதை புனைந்த வழி”-கலி. 144 : 30-31
“இருங்கழி பொருத ஈரவெண் மணல்
மாக்கொடி அடும்பின் மாஇதழ் அலரி
கூந்தல் மகளிர் கோதைக் கூட்டும்”-நற். 145 : 1-3
“அடும்பின் ஆய்மலர் விரைஇ நெய்தல்
நெடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்தல்
ஓரை மகளிர்”--குறுந் 401 : 1-3
அடும்பு தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | பைகார்ப்பெல்லேட்டே பாலிமோனியேலீஸ் (Bicarpellatae Polymoniales) |
தாவரக் குடும்பம் | : | கான்வால்வலேசி (Convolvulaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | ஐபோமியா (Ipomoea) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | பெஸ்காப்ரே (pescaprae) |
தாவர இயல்பு | : | படர் கொடி. சற்று வலிய கொடி. |
தாவர வளரியல்பு | : | கடற்கரையில் வறண்ட மணல் மேட்டில் படர்ந்து மிக நீண்டு வளரும். சீரோமார்ப் (xeromorph) என்று கூறுவர். |
சங்க இலக்கியப் பெயர் | : | அடும்பு |
பிற்கால இலக்கியப் பெயர் | : | அடும்பம், அடப்பம் |
உலக வழக்குப் பெயர் | : | அடப்பங் கொடி, குதிரைக் குளம்பிலைக் கொடி குதிரைக் குளம்புக் கொடி. |