இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
594
திருமாலுக்கு உரிய இத்திருத்துழாயின் இலைக் கொத்தும், மலரும் கண்ணியாகவும், அலங்கலாகவும் திருமாலுக்குச் சூட்டப்படும். இத்திருக்கோயில்களில், இதனை நீரில் இட்டுத் தூய நீராக வழங்கப்படும். இச்செடி மருந்துக்குப் பயன்படும்.
இதில் கருந்துளசி, நாய்த்துளசி என்ற இருவேறு இனங்களும் உள்ளன. இவையும் மருந்துக்கு உதவும்.
இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 64 டோயோச்சுக்கி (டி. 1938) என்பவர் அறுதியிட்டார்.