இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாவரங்கள்
627
மலர்களும், பெண்பால் மலர்களும் தனித் தனியாக இருக்கும். இம்மலரை யாரும் சூடிக் கொள்வதில்லை. இருப்பினும் கபிலர் இம்மலரையும் தலைவியும், தோழியும் சேகரித்ததாகக் கூறுவர்.
“தில்லை பாலை கல்லிவர் முல்லை”-குறிஞ். 77
இதன் குரோமோசோம் எண்ணிக்கை கண்டு சொல்லப்பட்டதாகத் தெரியவில்லை.
தில்லை தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | ஒரு பால் மலருடையவை யூனிசெக்சுவேலீஸ் |
தாவரக் குடும்பம் | : | யூபோர்பியேசி (Euphorbiaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | எக்ஸ்கொகேரியா (Excoecaria) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | அகலோச்சா (agallocha) |
ஆங்கிலப் பெயர் | : | புலிப்பால் மரம் (Tiger’s milk tree |
தாவர இயல்பு | : | சிறு மரம். எப்பொழுதும் பசிய இலைகளையுடையது. மரங்கள் காடாக வளரும். |
தாவர வளரியல்பு | : | கடலோரத்தில் உள்ள மாங்குரூவ் (Mangrove) மரம். உப்பங்கழித் தாவரம். |
இலை | : | பசிய, மெல்லிய, பளபளப்பான, சிறிய, தனி இலை. சுற்றடுக்கு. |
மஞ்சரியும் மலர்களும் | : | ஆண்பால் மலர், பெண்பால் மலர் என இருவகை மலர்கள் தனித்தனியே உண்டாகும். நுனிவளராப் பூந்துணரில் மலர்க் காம்பின்றி அரும்பும். |