கமுகு
அரீகா காட்சூ (Areca catechu,Linn.)
கமுகில் பாளை உண்டாவதிலிருந்து, இளம் பாக்குப் பிஞ்சில் உண்டாகும் சுவையான நீர் வரையில் மதுரைத் தத்தங்கண்ணனார் அகநானூற்றில் மிக அழகாகத் தொகுத்துப் பாடியுள்ளார்.
சங்க இலக்கியப் பெயர் | : | கமுகு |
தாவரப் பெயர் | : | அரீகா காட்சூ (Areca catechu,Linn.) |
கமுகு இலக்கியம்
கடியலூர் உருத்திரங்கண்ணனார், ‘கமுகு’ மரம் பரிய தாளினை உடையது எனவும், பாளையாகிய அழகினை உடைய பசிய பூ விரியாமல் கருவாய் (பாளைக்குள் மூடப் பெற்று) இருக்குமெனவும் கூறுகின்றார்.
“பரியரைக் கமுகின் பாளையம் பசும்பூக்
கரு இருந்தன்ன”
-பெரும்பா. 7-8
இக்கமுகு நெடிது ஓங்கி வளரினும் ‘புல்’ எனப்படும்.
இதனுடைய மலர் வரலாறு கூறுவார் போல மிக அகழாக மதுரைத் தத்தங்கண்ணனார் பாடியுள்ளார்.
கமுகின் பாளை, மலர்கள் தொடுத்த தொடையல் போன்றது: இணர்க்கிளை பல மலர்களைக் கொண்டது; பாளை முதிர்ந்த போது மலர்க் கொத்து பிடிப்பு விட்டு விழும்; பூங்குலை வாள் வடித்தது போல இருக்கும்; இத்தோற்றம் மிக அழகானது: அலர்ந்த பல பூக்கள் மாலை போலத் தோன்றும்; நரம்புகளோடு