இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாவரங்கள்
703
தெங்கு—தாழை தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | காலிசினே (Calycinae) |
தாவரக் குடும்பம் | : | பாமே (Palmae) |
தாவரப் பேரினப் பெயர் | : | கோகாஸ் (Cocos) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | நூசிபெரா (nucifera) |
சங்க இலக்கியப் பெயர் | : | தெங்கு |
பிற்கால இலக்கியப் பெயர்கள் | : | தாழை, தெங்கு |
உலக வழக்குப் பெயர் | : | தென்னை |
தாவர இயல்பு | : | 40-80 அடி உயரம் வரையில் ஓங்கி வளரும். தடித்த மரம்; கிளைக்காது; மரத்தில் இலையடித் தழும்புகள் காணப்படும்; உச்சியில் பல, நீண்ட பரவிய இலைகளை மூடி போல் விட்டு வளரும். |
இலை | : | 6-15 அடி நீளம் வரையிலானது; மெல்லிய நீண்ட சிற்றிலைகள் 2-3 அடி நீளம் வரையிலானவை; இலைக் காம்பு 3- 5 அடி நீளமிருக்கும். |
மஞ்சரி | : | தடித்த பாளையுள் உண்டாகும்; இணர்.முற்றியவுடன், பாளை பிளந்து விரியும். |
மலர் | : | பாளைக்குள்ளேயிருந்து வெளிப்படும் குலையில் பல நீண்ட நரம்புகள் உள்ளன. அவற்றில் முத்துக் கோத்தாற் போன்ற மஞ்சள் நிறமான சிறிய ஆண் பூக்கள், நரம்பின் மேற் புறத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும்; நரம்பின் அடியில் 2-3 பெண் பூக்கள் (உருண்டை வடிவானவை) ஒட்டிக் கொண்டிருக்கும்;; இவை குரும்பை எனப்படும். |