இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
724
சங்க இலக்கியத்
“தாஇல் பெரும்பெயல் தலைஇய யாமத்து
. . . . . . . . . . . . . . . .
எருவை நறும்பூ நீடிய
பெருவரைச் சிறுநெறி வருத லானே”
-நற். 261 : 5-10
“எருவை நீடிய பெருவரை யகம்தொறும்”
-நற். 294 : 4
பரிபாடல், இதனை “எருவை நறுந்தோடு”(பரி. 19 : 77) என்று குறிப்பிடுகின்றது. இதற்குப் பரிமேலழகர், எருவையது நறுந் தோட்டையுடையது; எருவை என்பது ‘எருவை செருவிளை மணிப்பூங்கருவிளை’ எனக் கபிலர் பெருங் குறிஞ்சியிலும் வந்தது என்று விளக்கம் தருகிறார்.
இவற்றைக் கொண்டு பார்த்தால், எருவை என்பது, ஒரு வகையான கோரை; குறிஞ்சி நிலத்தது. மலர் நறியது; தோடு போன்றது; கார்காலத்தில் மலர்வது என்பனவற்றை அறியக் கூடும். எனினும், இதன் மலர் பிற மலர்களை ஒப்பதன்று.
எருவை தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | குளுமேசி என்ற ஒரு வித்திலைத் தாவரத் தொகுப்பைச் சார்ந்தது. புல்லினம். |
தாவரக் குடும்பம் | : | சைபிரேசி (Cyperaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | சைபீரஸ் (Сyperus) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | ரோடன்டஸ் (rotundus) |
தாவர இயல்பு | : | கோரைப் புல். புதர் போல அடர்ந்து வளரும். மீசோபைட். 20 செ. மீ. உயரம். 6000 அடி உயரம் வரையிலான மலைப் புறத்திலும் வளரக் கூடியது. |
தண்டு | : | முப்பட்டையானது. |
இலை | : | பல இலைகள். 9-10 செ.மீ. நீளமும், 1-2 மி. மீ. அகலமும் உள்ளது. நடு நரம்பு எடுப்பானது. இலையடி தண்டை மூடியிருக்கும். |