இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தாவரங்கள்
73
“இனச்சிதர் உகுத்த இலவத்து ஆங்கண்
சினைப்பூங் கோங்கின் நுண்தாது பகர்நர்
பவளச் செப்பில் பொன்சொரிந் தன்ன”-அகநா. 25 : 9-11
கோங்க மரம் பூக்கத் தொடங்கு ஞான்று அதன் இலைகள் உதிர்ந்து விடும். இலையற்ற கிளைகளில் கோங்கின் மெல்லிய முகை அரும்பும் என்பதைக் குறுந்தொகை அறிவிக்கின்றது:
“இலையில் அஞ்சினை இனவண் டார்ப்ப
முகையோர் மென்முகை அவிழ்ந்த கோங்கின்
தலையலர் வந்தன-”-குறுந். 254 : 1-3
கோங்கம் தாவர அறிவியல்
தாவரவியல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | தாலமிபுளோரே |
தாவரக் குடும்பம் | : | பிக்சேசி (Віxaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | காக்ளோஸ்பர்மம் (Cochlospermum) |
தாவரச் சிற்றினம் | : | காசிப்பியம் (gossypium) |
சங்க இலக்கியப் பெயர் | : | கோங்கம், கோங்கு |
சங்க இலக்கியத்தில் வேறு பெயர்கள் | : | கணிகாரம் |
பிற்கால இலக்கியப் பெயர் | : | கன்னிகாரம் |
உலக வழக்குப் பெயர் | : | கோங்கிலம், கோங்க மரம், தணக்கு |
தாவர இயல்பு | : | மரம்; உயர்ந்து மலைப் பாங்கில் வளரும்; மரத்தில் மஞ்சள் நிறமான பால் வடிவதுண்டு. |
இலை | : | கூட்டிலை; கையன்ன பிளவுள்ளது. அடியில் நுண்மயிர் காணப்படும்; |
மலர் | : | தனிமலர். பெரியது. காம்புள்ளது; மிக அழகானது. |