பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

141




நாறல் மலத்தை மிதிக்கவும் வேண்டாம்; நல்ல தண்ணீர் விட்டுக் கழுவவும் வேண்டாம்.

நாறல் மீனைப் பூனை பார்த்தாற் போலே.

நாறல் வாயன் சேர்த்து வைக்கக் கர்ப்பூர வாயான் அநுவிக்கிறான். 14450

(தேடியதை அழிக்கிறான்.)


நாறல் வாயன் சேர்த்து வைத்தான்; சர்க்கரை வாயன் செலவு செய்தான்.

நாறல் வாயன் தேட ஊத்தை வாயன் உண்டானாம்.

நாறல் வாயன் தேடினதை நல்ல வாயன் தின்றாற்போல்.

நாறல் வாயன் தேடினான்; கர்ப்பூர வாயன் அழித்தான்.

நாறல் வாயனிடத்தில் இருந்தாலும் நச்சு வாயனிடத்தில் இராதே. 14455


நாறலையும் மீறலையும் கண்டால் நாத்தனாருக்குக் கொடுப்பாள்.

நான் ஆம் ஆம் என்றால் ஹரி ஹரி என்கிறான்.

நான் இட்ட மருந்தும் போக ஒட்டாது; நன்னாரி வேரும் சாக ஒட்டாது.

நான் இருக்கு மட்டும் ஊர் இருக்கும்.

நான் உங்கள் கடனைத் தீர்க்கிறவரைக்கும் நான் சாப்பிடுகிற சாப்பாடு சாப்பாடு அல்ல; மலம். 14460


நான் என்றால் இளக்காரம்; என் மலம் என்றால் பலகாரம்.

(என் சொத்து.)

நான் என்றால் உனக்குக் கடை வாயில் மலம்.

நான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைத்தது.

நான் ஒன்றை எண்ண, விதி ஒன்றை எண்ணிற்று.

நான் கண்டதே காட்சி; நான் கொண்டதே கோலம். 14465

(கொள்கை.)


நான் கண்ணாரக் கண்டேன், நாராயணக் குழம்பு வேண்டாம்.

நான் கத்தை கொடுத்தேன்; அவன் மெத்தை கொடுத்தான்.

நான்காம் மாதம் நாய்க்கும் மெருகிடும்.

நான் காய்ச்சிக் குடிக்கிறேன்: நீ பீய்ச்சிக் குடி.

நான் கிடக்கிறேன் வீட்டிலே; என் பேச்சுக் கிடக்கிறது நாட்டிலே. 14470