சே என்றதற்கு நாய் சேலை கட்டாமல் அலைகிறது.
சேடனுக்கு ஏன் குரங்கு?
- (சேடன்-நெசவு வேலை செய்கிறவன்.)
சேடனுக்கு ஏன் குரங்குப் புத்தி? சேற்றில் கிடப்பவனுக்கு ஏன் சோமக் கட்டு? 11490
சேணியன் குடுமி சும்மா ஆடுமா?
சேணியன் நூலை விற்பான்; செளராஷ்டிரன் சேலையை விற்பான்.
சேணியனுக்கு ஏன் குரங்கு?
சேணியனைக் கெடுக்கச் சாண் குரங்கு பற்றாதா?
- (போதும்.)
சேத நினைவுக்குப் பூதம் சிரிக்கும். 11495
சேப் பணத்துப் பட்ட ஈப் போல.
சேப்பு ஆத்தாள் வண்டவாளம் போய்ப் பார்த்தால் தெரியும்.
சேம்பு கொய்யச் சிற்றரிவாள் ஏன்?
- (வேணுமா?)
சேம்பு சொறியும்; வேம்பு கசக்கும்.
சேயின் முகம் பார்க்கும் தாயின் முகம் போல. 11500
சேர் இடம் அறிந்து சேர்.
சேர்க்கைக்குத் தக்க பழக்கம்.
சேர்க்கை வாசனையோ? இயற்கை வாசனையோ?
சேர்த் துரைக்கு மணங்குச் சேவகன்.
சேர்த்து வைத்துப் பசுக் கறக்கலாமா? 11505
- (பால் கறக்கலாமா?)
சேர்ந்தவர் என்பது கூர்ந்து அறிந்த பின்.
சேர்ந்து வாழ்வதே சிறந்த வலிமை.
சேர இருந்தால் செடியும் பகை; தூர இருந்தால் தோட்டியும் உறவு.
- (சேடியும் பகை.)