பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

191



பல்லக்கில் போகும் நாய் ஆனாலும் எச்சில் இலையைக் கண்டால் விடுமா? 15600


பல்லக்கு ஏறப் போகம் உண்டு; உன்னி ஏறச் சீவன் இல்லை.

(பலம், சக்தி.)

பல்லக்கு ஏறுவதும் நாவாலே; பல் உடைபடுவதும் நாவாலே.

பல்லக்கு ஏறுவோரும் பல்லக்குச் சுமப்போரும் அவரவர் செய்த நல்வினை, தீவினையே.

பல்லக்கு வருகிறதும் வாயினாலே; பல்லுப் போகிறதும் வாயினாலே.

பல்லாண்டு விளைந்த நிலம். 15605

(-மதுரை.)


பல்லாய் இல்லாமல் பால் கறப்பான்.

பல்லி சொல்வதெல்லாம் நல்லது; முழுகுவதெல்லாம் கழுநீர்ப்பானை.

பல்லில் பச்சரிசி வைக்க.

பல்லுக்கு எட்டாத பாக்கும், பக்கத்துக்கு எட்டாத அகமுடையானும் விண்.

பல்லுத் தேய்த்தற்குப் பதக்கு நெல் கொடுத்தேன். 15610


பல்லுப் பிடுங்கின பாம்பு போல.

பல்லுப் பெருத்தால் ளொள்ளும் பெருக்கும்.

பல்லுப் போனால் சொல்லும் போச்சு.

(பல்லுப் போச்சு, பழைய சொல்லும் போச்சு.)

பல்லுப் போனாலும் ளொள்ளும் போகாது.

பல்லும் பவிஷும். 15615


பல்லைக் காட்டிச் சிரிக்காதே.

பல்லைக் காட்டிப் பரக்க விழிக்காதே.

(காட்டிப் பரிதவிக்கிறது.)

பல்லைக் குத்தி மோந்து பார்த்தால் தெரியும் நாற்றம்.

பல்லைக் குத்தி மோந்து பார்த்தால் போலே.

பல்லைத் தட்டித் தொட்டிலிலே போடு. 15620


பல்லைப் பல்லை இளித்தால் பறையனும் மதிக்கமாட்டான்.

பல்லைப் பிடுங்கின பாம்பு போல.

பல் வரிசை இரண்டுக்கும் நடுவில் பதுங்கிவிட்ட நாக்குப் போல.

பல்விழுந்த புடையன்.