—13—
ஏரிக்கரையினில் வாழ்ந் திருந்து பிறரைக்காக்கும்
சேரியர் தாழ்ந்தார்களோ? - சகியே சேரியர் தாழ்ந்
77
ஊருக் கிழிந்தோர் காவல்; உயர்ந்தோர் இவர்கள் வாழ்வின்
வேருக்கு வெந்நீரடி - சகியே வேருக்கு வெந்நீரடி
78
அங்கக் குறைச்சலுண்டோ ஆதித்திராவிடர்க்கே
எங்கேனும் மாற்றமுண்டோ? - சகியே எங்கே
79
புங்கவர் நாங்கள்என்பார் பூசுரர்என்பார் நாட்டில்
தங்கட்கே எல்லாம் என்பார் - சகியே தங்கட்கே
80
ஆதிசைவர்கள் என்பார்; "ஆதிக்குப் பின்யார்" என்றால்
காதினில் வாங்காரடி - சகியே காதினில் வாங்காரடி
81
சாதியில் கங்கைபுத்ரர் என்பார்கள் சாட்சி, பத்ரம்
நீதியில் காட்டாரடி - சகியே நீதியில் காட்டாரடி
82
வேலன்பங் காளியென்பார் வெறுஞ்சேவ கனைக்கண்டால்
காலன்தான் என்றஞ்சுவார் -- சகியே காலன்தான் என்ற
83
மேலும் முதலி, செட்டி, வேளாளப் பிள்ளை முதல்
நாலாயிரம் சாதியாம் - சகியே நாலாயிரம் சாதி
84
எஞ்சாதிக் கிவர்சாதி இழிவென்று சண்டையிட்டுப்
பஞ்சாகிப் போனாரடி - சகியே பஞ்சாகிப் போனா
85
நெஞ்சில் உயர்வாய்த்தன்னை நினைப்பான் ஒருவேளாளன்
கொஞ்சமும் எண்ணாததால் - சகியே கொஞ்சமும்
86