பக்கம்:தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

—28—

அவனவன் செயும் தொழிலைக் - குறித்
தவனவன் சாதியென மதுவகுத்தான் - இன்று
கவிழ்ந்தது மநுவின் எண்ணம் - இந்தக்
காலத்தினில் நடைபெறும் கோலமும் கண்டோம் - மிகக்
குவிந்திடும் நால்வருணமும் - கீழ்க்
குப்புறக் கவிழ்ந்த தென்று செப்பிடத்தகும் - இன்று
எவன் தொழில் எவன்செய்யினும் - அதை
ஏனென்பவன் இங்கொருவ னேனுமில்லையே - நாம் (என்று)

***


பஞ்சமர்கள் எனப்படுவோர் - மட்டும்
பாங்கடைவ தால்நமக்குத் தீங்குவருமோ - இனித்
தஞ்சமர்த்தை வெளிப்படுத்தித் - தம்
தலைநிமிர்ந் தாலது குற்றமென்பதோ - இது
வஞ்சத்தினும் வஞ்சமல்லவோ - பொது
வாழ்வினுக்கும் இது மிகத் தாழ்மையல்லவோ - நம்
நெஞ்சத்தினில் ஈரமில்லையோ? - அன்றி
நேர்மையுடன் வாழுமதிக் கூர்மையில்லையோ - நாம் (என்று)