—32—
வஞ்சகர்க்கென்ன வழுத்தினர் சேசீ நல்
தோழி - இன்ப
வாழ்க்கையடைந்திட யார்க்கும் சுதந்தரம் என்றார்.
நாலு சுவர்க்கு நடுப்புறம் ஏதுண்டு?
தோழி - அங்கு
நல்ல மரத்தினிற் பொம்மை அமைத்தனர்
தோழா - அந்த
ஆலயம் சாமி அமைத்தவர் யாரடி?
தோழி - மக்கள்
அறிவை இருட்டாக்கி ஆள நினைப்பவர்
தோழா - மக்கள்
மாலைத் தவிர்த்து வழி செய்வரோ இனித்
தோழி - செக்கு
மாடுகளாக்கித்தம் காலைச்சுற்றச் செய்வர்
தோழா - அந்தக்
கோலநற் சேசு குறித்ததுதா னென்ன?
தோழி - ஆகா
கோயிலென்றால் அன்பு தோய்மனம் என்றனர்
தோழா.
***
ஆண்மைகொள் சேசு புவிக்குப் புரிந்ததென்?
தோழி - அவர்
அன்பெனும் நன்முர செங்கும் முழக்கினர்
தோழா-அந்தக்
கேண்மைகொள் சேசுவின்கீர்த்தி யுரைத்திடு
தோழி - அவர்
கீர்த்தியுரைத்திட வார்த்தை கிடைக்கிலை
தோழா - நலம்
தாண்டவம் ஆடிடச் செய்தவரோ அவர்?
தோழி - அன்று
தன்னைப் புவிக்குத் தரும் பெருமானவர்
தோழா - அந்த
ஆண்டவன் தொண்டர்கள் ஆகிடத்தக்கவர்
யாவர் - எனில்
'அன்னியர்' 'தான், என்ற பேதமிலாதவர்
தோழா.