—8—
வான்மறை எனத்தங்கள் வழக்கம் குறித்த நூலைத்
தேன்மழை என்றாரடி - சகியே தேன்மழை என்று
27
"ஏன்மறை?" எங்கட்கென்றே இசைத்தால் ஆரியர், நீங்கள்
வான்புகத் தான்என்றனர் - சகியே வான்புகத் தானென்றனர்
28
மேலேழு லோகம்என்றார் கீழேழ லோகம்என்றார்
நூலெல்லாம் பொய்கூறினார் - சகியே நூலெல்லாம்
29
மேலும் தமை நிந்திப்போர் மிகுகஷ்டம் அடைவார்கள்
தோலோதோல் கூடா தென்றார் - சகியே தோலோதோல்
30
சுவர்க்கத்தில் தேவர்என்போர் சுகமாய் இருப்ப துண்டாம்
அவர்க்குத்தாம் சொத்தம் என்றார் - சகியே அவர்க்குத்தா
31
துவக்கத்தில் ஆரியரைத் தொழுதால் இறந்தபின்பு
சுவர்க்கம்செல் வார்என்றனர் - சகியே துவக்கத்தில்
32
தம்சிறு வேதம்ஒப்பாத் தமிழரை ஆரியர்கள்
நஞ்சென்று கொண்டாரடி - சகியே நஞ்சென்
33
வெஞ்சிறு வேதம்ஒப்பா வீரரை ஆரியர்கள்
வஞ்சித்துக் கொள்குரடி - சகியே வஞ்சித்
34
அழிவேதம் ஒப்பாதாரை அரக்கரென் றேசொல்லிப்
பழிபோட்டுத் தலைவாங்கினார் -- சகியே பழிபோட்டுத்
35
பழிவேதம் ஒப்போம்என்ற பண்டைத் தமிழர்தம்மைக்
கழுவேற்றிக் கொன்றாரடி --சகியே கழுவேற்றிக் கொன்
36